நீங்கள் சமாதான நீதவானை சந்திக்கும் போது தெரிந்து கொள்ள வேண்டியவை :
நீங்கள் எவற்றை கொண்டு வர வேண்டும்? சமாதான நீதவானால் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
கீழ்வருவனவற்றை தயவுசெய்து கவனத்தில் கொள்க:
- வாடிக்கையாளர்கள் சேவை மேசைக்கு வரும் ஒழுங்கில் சமாதான நீதவானால் பார்க்கப்படுவார்கள்.
- சான்றளிப்பு(certification) தேவைப்படும் வாடிக்கையாளர்கள் ஆவணத்தின் மூலப் பிரதியுடன், அதன் பிரதியையும் சேர்த்து வழங்க வேண்டும்.
- தங்கள் அடையாள ஆவணம் (களை) சான்றளிப்பு செய்ய வேண்டிய வாடிக்கையாளர்கள் சமாதான நீதவானிடம் நேரடியாக வருகை தர வேண்டும்.
- ஆவணத்தின் மூலப் பிரதி மின்னணு வடிவத்தில் இருந்தால், ஆவணத்தின் மூலப் பிரதியை, மின்னணு சாதனத்தில், சமாதான நீதவானுக்கு காட்டவேணும்.
- சான்றளிப்பு ஆவணங்களின் எண்ணிக்கையை 10 ஆகக் கட்டுப்படுத்துவது வழக்கம். இருப்பினும், சமாதான நீதவான் தமது வசதிக்கேற்ப பிரதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவார்.
- படிவங்கள் நிரப்பப்பட வேண்டும், ஆனால் தயவுசெய்து எந்த ஆவணத்திலும் முன்கூட்டியே கையொப்பமிட வேண்டாம்.
- சமாதான நீதவானிடம் சமர்ப்பிக்க உங்கள் ஆவணங்கள் மற்றும் பிரதிகள் வரிசைப்படுத்தி வழங்குதல் நன்று.
- கையொப்பம் சரிபார்க்கப்படும்போது முறையான அத்தாட்சி /சான்று (ID) வழங்க வேண்டும்.
சில சேவைகள் சமாதான நீதிபதியின் அதிகார எல்லைக்குள் இருக்க மாட்டாது.